பசும்பொன்னுக்கு கடுதாசு - 1

1 comments
‘எனது இளைஞர்கள் இரும்பைப் போன்ற தசைகளையும் உருக்கு போன்ற நரம்புகளையும் இடியோசை கேட்டு அஞ்சாத மனவலிமையையும் பெற்று எதற்கும் துணிந்த ஆண்மையிளம் சிங்கங்களாகத் திகழ வேண்டும்’சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்; அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’




எல்லாருக்கும் வணக்கமுங்க , தேவர் அய்யா உங்களுக்கும் வணக்கமுங்க ...
உள்ளம் உடல் மனம் எல்லாம் ஒன்று பட்ட வாழ்வு உங்களுதுங்க ....
உங்களால மாதிரி மனுசங்க பல்லாயிரம் வருசங்களுக்கு ஒரு முறை தான் பொறப்பு எடுப்பாக ....

அதனால் தான் உங்கள தெய்வமாக மக்கள் கும்பிடுறாங்க ....

ஆனா அய்யா நாஞ் சாதாரண மனுசனுங்க ......
ஆரம்ப காலத்துல உங்கள பத்தி நிறைய தப்பு தப்பா சொன்னாக ....
அதயல்லாம் எல்லோரையும் போல நானும் உண்மையின்னு நம்பிக்கிட்டு இருந்தனுங்க .....
ரொம்ப நாளா மனசுவிட்டு உங்களோட பேசனுமுன்னு தோணிச்சு ...
அதான் அய்யா இந்த கடுதாசு ....

நாஞ் சின்ன வயசா இருக்கும் போது உங்களை பத்தி கேட்டு தெருஞ்சுருகேன் அய்யா ...

ஒங்கள பத்தி பேசும் போது மக்கள் ஒரு சாரர் தெய்வமுன்னு பேசுவாங்க ..
மறு சாரர் சாதி வெறியர் அப்படின்னு பேசுவாங்க அய்யா ...
எது உண்மைன்னு எனக்கு சரியா அந்த வயசுல்ல தெரியல்ல ...
கொஞ்சம் வயசான பிற்பாடு படிக்க ஆரம்பிச்சன் அய்யா
அப்பகூட முழுசா உங்கள பத்தி தெரிஞ்சுக்க முடியல .....
அதுக்கப்புறம் தேடி தேடி நிறைய படிக்க ஆரம்பிச்சன் ...
வரலாறு , பூவியல் ,வானியல் , கணிதம் , தத்துவம் ,மருத்துவம் ,வாணிபம் ன்னு சகல துறைகளையும் படித்த பின்னாடி தான்
உங்க பார்வை எனக்கு புலப்பட ஆரம்பிச்சது ....

*//தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்./** ...
அது எப்டிங்க நீங்க அன்னைக்கு சொனீங்க இன்னும் மாறலைங்க ......இது உங்க வார்த்தைங்க.....
நீங்க சொன்ன இன்னும் சில வரிகள பாபோமுங்க ...

**/ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்./****

உங்க காலத்துல மட்டுமில்லை இன்னைக்கும் அப்படி தானுங்க ..

அன்னைக்கு வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழையும் போது மதராஸ்,பாம்பே , கல்கத்தா போன்ற ஊர்களில் தனி கோட்டை கட்டி கொண்டான் .....

இன்னைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கி கொண்டங்க ...

அன்னைக்கு நெசவு செய்த மக்களை கட்டை வெரலை வெட்டி நெசவு செய்ய முடியாமல் செஞ்சாங்க .
இன்னைக்கு நாலு வருசத்துக்கு முன்னாடி பேல் கணக்குல பருத்தியை
இந்தியாவுக்கு உள்ள கொண்டு வந்து கொட்டு நானுங்க .
வெளஞ்ச பருத்தியை விற்க முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்கள் .......
இன்னைக்கு நூல்களை மொத்தாமாக கொள்முதல் செய்து நெசவு நிறுவனங்கள் , ஆடை நிறுவனங்களை மூட வைக்கிறார்கள் ...

அன்னைக்கு கப்பல் விட்டதுக்கு வெள்ளைக்காரன் நம்மை தண்டிசான்
இன்னைக்கு மீன் பிடிக்க கூட கடலுக்கு சுதந்தரமாக போக முடியலை .
மீன் பிடிக்க தனி சட்டம் , நடு கடலில் மீன் பிடிக்க அயல் நட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி , கடற்கரை பகுதில் கால காலமாக வாழும் மக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்க தனி சட்டம் ..
அய்யா நீங்க நீங்க சொன்னீங்க அன்னைக்கு

**/ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்./****

இன்னும் மாறலை ....

இது மொத கடுதாசிங்க இன்னும் நிறைய உங்களோட மனம் விட்டு கடுதாசி அனுப்புறேனுங்க .....
இப்போதைக்கு வணக்கமுங்க

read more...
பசும்பொன்னுக்கு கடுதாசு - 1SocialTwist Tell-a-Friend