அறந்தாங்கி தொண்டைமான்கள்

3 comments

கள்ளர் குடியில் தோன்றிய தொண்டைமான் மன்னர்களில் ஒரு பிரிவினர் 450 ஆண்டுகளுக்கு மேலாக அறந்தாங்கி பகுதியை தனி அரசாகவும் மற்றும் சோழ, பாண்டிய , விசய நகர, மராட்டிய மன்னர்களின் மேலாண்மையை ஏற்றும் ஆட்சி செய்தனர்.
அறந்தாங்கி பகுதில் உள்ள சிங்கவனம் அரையன் மெய்கண் கோபாலர்கள், பாளையவனம் அரையன் வணங்காமுடி பண்டாரத்தார்கள் கள்ளர் குலத்தை சேர்த்தவர்கள் என்பதை நாம் அறிந்ததே.
அறந்தாங்கி தொண்டைமான் உயர் அலுவலர் பெயர் கலியுக மெய்யன் காலிங்கராயர் என்பவன் குறிக்கப்படுகிறான். மேலும் உயர் அலுவலராக கற்பூர காலிங்கராயர் , சிற்றம்பலமுடையான் காலிங்கராயர் , திருச்சற்றான் காலிங்கராயர், திருவம்பலமுடையான் காலிங்கராயர், நிரம்பவழகியான் காலிங்கராயர் இருந்துள்ளார்கள். காளிங்கராயன் பட்டம் தாங்கிய கள்ளர் குடும்பங்கள் இன்றும் அந்த பகுதில் வாழ்கின்றனர்.
ஆய்வாளர் ஜெ. ராஜா முகமது அவர்கள் புதுக்கோட்டை தொண்டைமான் பற்றிய தனது ஆய்வில், புதுக்கோட்டை தொண்டைமான் தெலுங்கு தாய்மொழி கொண்டவர்கள் , இவர்களுக்கும் அறந்தாங்கி தொண்டைமான்களுக்கும் தொடர்பு இல்லை என்று எந்த ஆதாரங்கள் இல்லாமலும் பதிவு செய்ததை , ஆய்வாளர் ராசு கவுண்டர் அவர்கள் இதனை மறுத்து தக்க ஆதாரங்கள் கொண்டு இருவரும் ஒரு கால்வழியினரே என்று விளக்கி உள்ளார். ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் தொண்டைமான்கள் அனைவரும் கள்ளரின் ஒரு பிரிவினரே என்று கூறியதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
தொண்டைர்கோன் என்று பாராட்டப்பெறுகின்றான் பாண்டிய மன்னர்களின் தளபதி, கப்பற்கோவை தலைவன், கப்பலூர் நாடு கருமாணிக்கன். இன்றும் கப்பலூர் நாடு கருமாணிக்கன் வாரிசுகள் கள்ளர் குலத்தை சேர்த்தவர்கள் என்பதை நாம் அறிந்ததே.
கொங்கு மண்டலத்தில் சிறப்போடு வாழும் கொங்கு வேளாளர்களில் தொண்டைமான் பட்டம் உள்ளது. அவர்கள் கஞ்சி தொண்டைமான் மன்னர் தங்களுக்கு இந்த பட்டம் அளித்தாகக் கூறிக்கொள்ளுகிறார்கள்.
சுமார் கி.மு 3 – 1 நூற்றாண்டுகள் காலத்தில் உக்கிரப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னன் சோழநாட்டில் இருந்து 48000 வேளாளர்களை புதுக்கோட்டைப் பகுதியில் குடியேற்றியதாக கூறப்படுகிறது. இந்த புதுக்கோட்டை பகுதியில் தொண்டைமான்கள் பிற்காலச் சோழர்கள் காலத்தில் திருப்பதி தொண்டைமான் கோட்டை என்ற பகுதியில் இருந்து இங்கு வந்து சிலர் அன்பில், அறந்தாங்கி, சூரைக்குடி போன்ற பகுதியில் குடியமர்ந்தனர்.
தஞ்சை, புதுக்கோட்டைப் பகுதியை மதுரை பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தவர்கள் இந்த தொண்டைமான் வேந்தர்கள். கி.பி.14-ஆம் நூற்றாண்டில், இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனின் பிரதிநிதியாக இருந்து, புதுக்கோட்டைக்கு உட்பட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தார் மஞ்சக்குடியுடையார், திருநோக்கு அழகியார் தொண்டைமான் .
இவரின் மரபு வழியே வந்தவர்கள், அறந்தாங்கியில் கோட்டைக் கொத்தளங்கள் அமைத்து, அந்த ஊரையே தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார்கள்.
இவர்களின் கல்வெட்டு, செப்பேடுகளில் இவர்கள் ஆவணங்களிலும இவர்களின் பூர்விகமாக தொண்டைநாட்டுத் தொடர்பே பெரிதும் இடம்பெற்றுள்ளது. தங்களது பூர்வீகமாக காஞ்சி, காளத்தி மலை (சித்தூர்), பாலாறு, கம்பாநதி, ஆதொண்டைமலை, தொண்டைமான் நாடு என்றே அதிகமாக குறிப்பிடுகின்றர்.
அறந்தாங்கி தொண்டைமான்கள் ஆவுடை நாதர் அனுக்கிரகம் பெற்றோர் என்றும், "ஆவுடைய நாயனார் ஸ்ரீபாதபக்தர்" என்றே தங்களைஅழைத்துக்கொண்டனர். ஆவுடை என்ற பெயர் தாங்கிய ஆவுடை ரகுநாத தொண்டைமான் என்பவரே புதுக்கோட்டை தொண்டைமான்காளில் முதன்மையானவர் என்பது குறிப்பிட்ட தக்கது.
அறந்தாங்கி தொண்டைமான் தங்களை நாககன்னிகை வழிவந்தவர்கள் என்றும், இந்திரன் ஏழடி கொண்டவன் என்றும் தங்களை கூறிக்கொள்கின்றனர்.
அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களின் கலை பொக்கிசம் ஆவுடையார்கோயில். இந்த கோயில் விக்ரம சோழபாண்டியன், தஞ்சையை ஆண்ட நாயக்கன், மராட்டி மன்னன், சேதுபதி மன்னன், தொண்டைமான் மன்னன் பாலைவன வணங்காமுடி பண்டாரத்தார் ஆகியோரால் ஆறு மண்டபங்கள் இணைத்துக் கோவிலாக கட்டப்பட்டுளது.
அறந்தாங்கி தொண்டைமான்கள் மிழலை நாட்டுக்கு உரியவர்கள். வெள்ளாற்றுக்கு தெற்கிலும் பாம்பாற்றுக்கு வடக்கிலும் அமைந்த பகுதியே மிழலை கூற்றம்.
மிழலை கூற்றத்திலும் காஞ்சிபுரம் என்ற ஊர் ஒன்றை ஏற்படுத்தி அங்கு ஏகாம்பரநாதரைப் பிரதிட்டை செய்து, இறைவனின் திருநாமத்தை தங்கள் பெயராகவும் கொண்டனர் (ஏகாம்பர தொண்டைமான்).
அறந்தாங்கி தொண்டைமான் மரபினர் 11 ஆம் நூற்றாண்டு தொடங்கிப் புதுக்கோட்டை பகுதியில் பல்வேறு நிலைகளில் அதிகாரிகளாக விளங்கினர். கையெழுத்து இடும் அலுவலராக, நாடாழ்வாராக, அரையராக, சார் அரையராக விளங்கி பாலையூர் பகுதிக்கு அரசு ஆக நியமனம் பெற்று அறந்தாங்கியைத் தலைநகராகக் கொண்டு அறந்தாங்கி அரசாக வளர்ந்து 1300 முதல் 1759 வரை புதுக்கோட்டை பகுதியில் தனியரசாக ஆவுடையார் கோயில், அறந்தாங்கி, ஆலங்குடி தென்பகுதி, திருமெய்யம் கீழ்ப்பகுதி வட்டங்களில் ஆட்சி செலுத்தும் அரசர்களாக விளங்கிவந்துள்ளனர்.
இவர்களின் அலுவலர்களாக குறிக்கப்படும் பட்டங்களில் இன்றும் புதுக்கோட்டை பகுதியில் கள்ளர்கள் வாழ்கின்றனர்.
அரியபிள்ளை, அறந்தர், கண்டியதேவன், முதலியாண்டார் , முனையத்தரையன், மங்கலராயர், மணவாளன், வாண்டையார் என்ற பட்டங்கள் நேரடியா அங்கு கள்ளர்களுக்கு மட்டுமே உள்ளன.
சில கள்ளர் பட்டங்கள் மருவியதாக உள்ளன. அவை
தென்னவதரையன் - தென்னவராயர்
சேதிபராயர் - சேதிராயர்
ஆளப்பிறந்தான் - ஆளம்பிரியர்
நயினார் - நயினியர்
உத்தாண்டையார் - உத்தமண்டார்.
தமிழ்நாடன் – தமிழுதரையர்
அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் சில பகுதிகளின் ஆட்சி பொறுப்பைத் மகன்கள் மற்றும் சகோதரர்களுக்கும் தந்துள்ளனர்.
#அறந்தாங்கி தொண்டைமான்கள்
01) உய்யவந்தான் திருநோக்கழகியான் தொண்டைமான்.
02) சூரிய தேவர் தொண்டைமான்.
03) பிச்சர் தொண்டைமான்.
04) தேவராயத் தொண்டைமான்.
05) பெரிய ரவினியனான ரகுநாதத் தொண்டைமான்.
06) ஆளுடை நயினார் தொண்டைமான்
07) ஆவுடை நயினார் தொண்டைமான்
08) ஆண்டியப்ப நயினார் தொண்டைமான்.
#பாண்டிய மன்னர்களின் மீது கொண்ட அன்பினால்
09) சுந்தரபாண்டியத் தொண்டைமான்
10) விக்ரம பாண்டியத் தொண்டைமான்
11) குலசேகர தொண்டைமான்
#பெருமாள் பெயருடைய தொண்டைமான்கள்
12) திருநெல்வேலிப் பெருமாள் தொண்டைமான்.
13) அழகிய பெருமாள் தொண்டைமான்.
14) இன்பவனப் பெருமாள் தொண்டைமான்.
15) ஏகப் பெருமாள் தொண்டைமான்.
16) வளர்த்து வாழ்வித்த பெருமாள் தொண்டைமான்
17) மழவல்லப் பெருமாள் தொண்டைமான்
18) அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமான்
#நாயக்க மன்னர்களின் மீது கொண்ட அன்பினால்
19) இரகுநாத நாயக்கத் தொண்டைமான்.
20) அச்சுதப்ப நாயக்கத் தொண்டைமான்.
21) தியாகராசர் நரச நாயக்கத் தொண்டைமான்.
#வணங்காமுடி தொண்டைமான்கள்
22) அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான்.
23) வணங்காமுடித் தொண்டைமான்.
24) முத்து வணங்காமுடித் தொண்டைமான்.
25) விசய அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான்.
26) அதிசூரராமத் தொண்டைமான்.
27) அலைவில் அஞ்சாத தொண்டைமான்.
28) அச்சமறியாத் தேவர் தொண்டைமான்.
29) பொன்னம்பலநாத தொண்டைமான்.
30) வீரவினோதத் தொண்டைமான்.
31) தீராவினை தீர்த்தான் தொண்டைமான்
#உய்யவந்தான் திருநோக்கழகியான் தொண்டைமான் (பொ. ஆ-1319)
புதுக்கோட்டைப் பகுதியை மதுரை பாண்டிய மன்னர்களின் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்தவர்கள் தொண்டைமான் வேந்தர்கள். கி.பி.14-ஆம் நூற்றாண்டில் 1319 ல், இரண்டாம் மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னனின் பிரதிநிதியாக இருந்து, புதுக்கோட்டைக்கு உட்பட்ட பகுதியை ஆட்சி செய்து வந்தார். அந்த மன்னர், மஞ்சக்குடி எனும் ஊரில் இருந்தபடி ஆட்சி செய்ததால், அவர் மஞ்சக்குடியுடையார், திருநோக்கு அழகியார் தொண்டைமான் என்றெல்லாம் அழைக்கப்பட்டார்.
மஞ்சக்குடியுடையார் தான் பிறந்த ஊரில், அதாவது மஞ்சக்குடியில் இரண்டு ஆலயங்களைக் கட்டினார். அந்த சைவ- வைணவ ஆலயங்களில் குடிகொண்டிருக்கும் இறைத் திருமேனிகளை தான் எப்போதும் வணங்கும் கோலத்தில், சுமார் ஐந்தரை அடி உயரம் உள்ள தனது உருவச்சிலைகளை நிறுவியுள்ளார். இவரது அலுவலராக அம்பலகாரர் ஒருவர் இருந்தாக உள்ளது.
#சூரிய தேவர் தொண்டைமான் (பொ. ஆ-1399)
சூரிய தேவர் தொண்டைமான், பிள்ளைவயல் என்ற ஊரைக் கொடையாக மாறவர்மன் வீரபாண்டியன் ஆட்சியில் திருநாள் சிலவுகளுக்காக அளித்துள்ளார்.
#பிச்சர் தொண்டைமான் (பொ. ஆ–1426)
1426 ஆம் ஆண்டு ராசராச வளநாட்டுப் பாலையூர் நாட்டவருக்கு பிச்சர் தொண்டைமான் வரி நிர்ணயம் செய்ததை புராதனபுரீசுவரர் கோயில் கல்வெட்டு குறிக்கிறது. இவர் சூரியதேவரான குலசேகர தொண்டைமான் மகன் ஆவர். இவர் அலுவலராக திருச்சிற்றம்பலமுடையன் காலிங்கராயர் என்பவர் இருந்துள்ளார்.
#தேவராயத் தொண்டைமான் (பொ. ஆ-1432 - 46)
1432-46 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர். குற்றம் செய்தவர்களுக்கு இவர் வழங்கிய தண்டனை போலவே வழங்க வேண்டும் என்று 1482 ஆம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
#ஆளுடை நயினார் தொண்டைமான் (பொ. ஆ–1434)
1434 ஆம் ஆண்டு ஆளப்பிறந்தானை சேர்த்த கண்டியதேவர், பிச்சன் தொண்டைமான், பகையாபிள்ளையான தோற்றம் அழகியார், பிச்சன் ஊராட்சியார் மணவாளன், ஆரியச் சக்கரவர்த்திகள் மணவாளன் ஆகியோர்க்கு குடிக்காடு என்ற பகுதி காணியாகக் ஆளுடை நயினார் தொண்டைமான் அவர்களால் கொடுக்கப்பட்டது.
#அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1441)
அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமான் அவர்கள் எட்டியத்தளி, ஆளப்பிறந்தான், குறும்பூர் பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு நிலங்கள் கொடையாக அளித்துள்ளார். இவரது தம்பி சுந்தரபாண்டியத் தொண்டைமான் மற்றும் குலசேகர பாண்டிய தொண்டைமான். அழகிய மணவாளப் பெருமாளுக்கு நயினார் இலக்கப்பத் தண்ணாயக்கத் தொண்டைமானார், மெய் நின்ற பெருமாள் அதிசூரராமத் தொண்டைமான் என இரண்டு ஆண் மக்கள் இருந்தனர்.
#சுந்தரபாண்டியத் தொண்டைமான் (பொ. ஆ-1443)
எட்டியத்தளி அகத்தீசுரமுடையார் கோயிலுக்கு குலசேகர பாண்டியன் ஆட்சியில் சுந்தரபாண்டியத் தொண்டைமான் சாலிய நகரத்தாரும் கைக்கோளரும் அரைப்பணம் கொடுக்க வேண்டும் என்று வரி நிர்ணயம் செய்துள்ளார்.
#திருநெல்வேலிப் பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1463)
புதுக்கோட்டை நெல்வேலி பகுதியில் வாழ்ந்த இவரும் அறந்தாங்கி தொண்டைமான் களில் ஒருவர். 1463 ஆம் ஆண்டு திருமால் கோயில், பிடாரி கோயிலுக்கு கொடை அளித்துள்ளார். இதனை நிரம்ப அழகியார் காலிங்கராயன் என்பவர் எழுதியுள்ளார்.
#ஆவுடை நயினார் தொண்டைமான் (பொ.ஆ-1476)
1476 ஆம் ஆண்டு ஆளப்பிறந்தானை சேர்த்த பூமிசுவரர் கோயிலில் காலை சந்திக்காக ஆவுடை நயினார் தொண்டைமானால் 12 மா நிலம் கொடையாகக் கொடுக்கப்பட்டது.
#இன்பவனப் பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1476)
இன்பவனப் பெருமாள் தொண்டைமான் அவர்கள் 1476 ஆம் ஆண்டு கோயில்களுக்கு வயலைக் கொடையாக அளித்துள்ளார்.
#ஏகப் பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1478)
பொ. ஆ - 1478 ஆம் ஆண்டு பல கோயில்களுக்கு கொடையாக நிலங்களை அளித்துள்ளார். இவர் கல்வெட்டுகள் மூலம் இவர் விசய நகர ஆட்சிக்கு உட்பட்டு ஆட்சி செய்தவர் என்று தெரிகிறது. இவர் அலுவலர்களாக காலிங்கராயன் என்பவர்கள் இருந்துள்ளனர். இவருக்கு மூன்று மகன்கள்
#அதிசூரராமத் தொண்டைமான் (பொ. ஆ–1478)
அழகிய மணவாளப் பெருமாள் தொண்டைமானின் மகன் ஆவார், இவர் ஏகப் பெருமாள் தொண்டைமான் காலத்தில் (1478) ஆளப்பிறந்தான் பகுதியில் நிர்வாகியா இருந்தார்.
#அலைவில் அஞ்சாத தொண்டைமான் (பொ. ஆ–1478)
ஏகப் பெருமாள் தொண்டைமானின் மகன், இவர் குறும்பூர் கோயிலில் ஒரு பகுதியை தம் கொடையாக திருப்பணி செய்துள்ளார்.
#அச்சமறியாத் தேவர் தொண்டைமான் (பொ. ஆ–1478)
ஏகப் பெருமாள் தொண்டைமானின் மற்றொரு மகன்
#பொன்னம்பலநாத தொண்டைமான் (பொ. ஆ–1508)
ஏகப் பெருமாள் தொண்டைமான் மூத்த மகன் சிதம்பரநாதன் என்ற பொன்னம்பலநாத தொண்டைமான். இவர் விஜய நகர அரசர்கள் கிருஷ்ணதேவராயர், அச்சுத தேவராயர் ஆகியோரின் கீழ் ஆட்சி செய்தனர் என்று வளவர்மாணிக்கம் கைலாசநாதர் கோயில் கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. 1508 இல் பட்டம் ஏற்றவுடன் இவன் இன்றியமையாத செல்வுகட்காகத் கோயில் பண்டாரத்திலிருந்து கடன் பெற்று 10 ஆண்டுகள் ஆகியும் கட்டமுடியாததால் வடவெள்ளாற்று நாட்டு களக்குடி, மையூர் விஜயபுரம் ஊர்களை விற்று வந்த பொருள்களை கொண்டு கோயில் கடனை அடைத்தார். இவரது மகன் வீரவினோதத் தொண்டைமான்.
பொன்னம்பலநாத தொண்டைமான் பட்டப்பெயர்கள் அச்சம் அறியான், அலைவில் அஞ்சாதான், திருமிழலை திருநாடன், மல்லையாதிபதி
#வீரவினோதத் தொண்டைமான் (பொ. ஆ–1530)
பொன்னம்பலநாத தொண்டைமான் தன் தந்தை ஏகப் பெருமாள் தொண்டைமானாரிடம் இளமைப் பருவத்தில் காணியூர்கள் பெற்றுத் தான் நிர்வாகம் செய்தது போலவே தன்னுடைய மகன் வீரவினோதத் தொண்டைமானுக்கு மிழலைக் கூற்றத்து மேல்கூறு நாட்டு நாலுகோட்டைப் பற்று ஏற்றநாட்டுப் புரவில் சிறுகுறிச்சி வயல் என்ற ஊரை அளித்து. வளவர்மாணிக்கம் என்ற ஊரில் வீடு ஒன்றை அளித்தார். வீரவினோதத் தொண்டைமான் அந்த பகுதியில் நிர்வாகத்தை மேற்கொண்டார்
#ஆண்டியப்ப நயினார் தொண்டைமான் (பொ. ஆ-1670)
இவர் பூமியூர் மடத்திற்கு நிலங்களை வழங்கியுள்ளார்.
#இரகுநாத நாயக்கத் தொண்டைமான் (பொ. ஆ-1670)
#அச்சுதப்ப நாயக்கத் தொண்டைமான் (பொ. ஆ-1670)
தஞ்சை நாயக்கரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு இரகுநாத நாயக்கத் தொண்டைமான், அச்சுதப்ப நாயக்கத் தொண்டைமான் இருவரும் தங்களுக்குள் அறந்தாங்கி அரசுக்கு உரிமை வேண்டி போர் வரும் சூழ்நிலையில் இருவரும் போர் செய்யாமல் ஒப்பந்தம் செய்து கொண்டனர்
#பெரிய ரவினியனான ரகுநாதத் தொண்டைமான் (பொ. ஆ–1700)
இவர் ஆண்டியப்ப நயினார் தொண்டைமான் மகன், 1700 ஆம் நூற்றாண்டில் பொய்கை வயல் என்ற பகுதியை கோயிலுக்கு கொடையாக வழங்கியுள்ளார்.
#அழகிய பெருமாள் தொண்டைமான் (பொ. ஆ-1700)
அச்சுதப்ப நாயக்கத் தொண்டைமான் மகன் அழகிய பெருமாள் தொண்டைமான். இவர் இறங்கல் மீட்டான் வயலையும் செட்டி செய் என்ற நிலத்தையும் திருப்பெருந்துறை கோயிலுக்கு கொடையாக அளித்தனர்.
#அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான் (பொ. ஆ-1716)
அறந்தாங்கி அரசு ஆண்டவராய இரகுநாத ஆவுடைத் தொண்டைமான் அவர்கள் மகன் அருணாச்சல வணங்காமுடி தொண்டைமான். 1716 ஆம் ஆண்டு அந்தணர்களுக்கு ஏனாதி என்ற ஊரை வழங்கியுள்ளார்
#வணங்காமுடித் தொண்டைமான் (பொ. ஆ-1739)
அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான் மகன் வணங்காமுடித் தொண்டைமான் ஆவார். இவர் 1739 ஆம் ஆண்டு பெருவயல் வள்ளி தெய்வானை கோயிலுக்கும், பரமேஸ்வரன் கோயிலுக்கும் ஊர்களை கொடையாக தந்துள்ளார்.
#முத்து வணங்காமுடித் தொண்டைமான் (பொ. ஆ-1739)
சிதம்பர வணங்காமுடித் தொண்டைமான் மகன் முத்து வணங்காமுடித் தொண்டைமான். 1739 ஆம் ஆண்டு பெருவயல் இமுருகன் கோவிலின் பூசை அபிடேகம், நைவேத்தியம் திருவிளக்கு கட்டளைகட்காக குடியூர், சிந்தாமணி ஏந்தல் ஆகிய ஊர்களை மராட்டிய மன்னர் பிரதாப்சிங் அவர்களின் நலத்தின் பொருட்டு மேலும் இவர் தந்தை தாய் நலம் வேண்டி இந்த கொடையை வழங்கியுள்ளார். 1740 ஆம் ஆண்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலுக்கு நாட்டாணி என்ற ஊரை கொடையாக வழங்கியுள்ளார்
#விசய அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான் (பொ. ஆ-1759)
ஆண்டவராயா வணங்காமுடி தொண்டைமான் மகன் விசய அருணாச்சல வணங்காமுடித் தொண்டைமான். இவர் தன் ஆட்சிக்கு உட்பட்ட நிலங்களை வைகை நாட்டில் உள்ள கிறிஸ்த்துவர்களான ராயப்பத்தேவர் மகன் அந்தோணி முத்து தேவருக்கு நிலத்தை விற்பனைசெய்துள்ளார்.
மேலும் இவர்கள் அறந்தாங்கி தொண்டைமான்கள் மகன்கள் மற்றும் சகோதர்கள் சில பகுதியின் பொறுப்பாளராக இருந்துள்ளனர். அவர்கள்
#வளர்த்து வாழ்வித்த பெருமாள் தொண்டைமான்
#விக்ரம பாண்டியத் தொண்டைமான்
#குலசேகர தொண்டைமான்
#மழவல்லப் பெருமாள் தொண்டைமான்
#தீராவினை தீர்த்தான் தொண்டைமான்
#தியாகராசர் நரச நாயக்கத் தொண்டைமான்
குறிப்பு:
1) புதுக்கோட்டை தொண்டைமான் இவர்களின் காழ்வழியினர். ஆவுடையார் இருவருக்கும் பொது தெய்வம்.
2) புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களில் பலர் திருமால் என்றும், அறந்தாங்கி தொண்டைமான் மன்னர்களில் பலர் பெருமாள் என்றும் பெயர் தாங்கியவர்கள்.



3) புதுக்கோட்டை தொண்டைமான் இந்திரகுலம் என்றும், அறந்தாங்கி தொண்டைமான் தங்களை இந்திரன் ஏழடி கொண்டவன் என்றும் கூறிக்கொள்கின்றர்.
4) அறந்தாங்கி வணங்காமுடி தொண்டைமான் வழியினரே , பாளையவனம் வணங்காமுடி பண்டாரத்தார் அரையன்கள்.
5) இன்றும் அறந்தாங்கி, புதுக்கோட்டை தொண்டைமான் வழியினர் இந்த பகுதியில் கள்ளர் குலத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
6) சிவகங்கை பட்டமங்கலத்தில் வாழ்ந்து வருகின்ற தொண்டைமான்கள் , அறந்தாங்கி தொண்டைமான்களையே தங்களது முன்னோராக கூறிக்கொள்கின்றனர். (இலங்கை மலையக தந்தையும் அமரர். சௌமிய மூர்த்தி தொண்டமான் )
நன்றி:
உயர்திரு. புலவர் செ. இராசு
நூல் : அறந்தாங்கி தொண்டைமான்
read more...
அறந்தாங்கி தொண்டைமான்கள்SocialTwist Tell-a-Friend

வரலாற்றை படிக்காத இனம் வாழாது

1 comments
*வரலாற்றை படிக்காத இனம் வாழாது*
சேரர், சோழர், பாண்டியர்களில் சோழர்கள் மட்டும்தான் பெரிய ஆட்சிப்பரப்பைக் கொண்டிருந்தனர். *தமிழகம் மட்டுமின்றி கங்கம்பாடி, மேலை சாளுக்கியம் (கர்நாடகா), கீழை சாளுக்கியம் (ஆந்திரம்) ஆகிய பகுதிகளும், இலங்கையும் ராஜராஜ சோழனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.*
ஆனால், *ராஜேந்திர சோழன் மட்டும்தான் இந்தியா முழுமையும் வென்றிருந்தான்.*
*வங்கம், மாலத்தீவு, தாய்லாந்து, ஜப்பான், இலங்கை, இந்தோனேஷியா, கம்போடியா என தெற்கு ஆசியா முழுவதுமே பிடித்துவிட்டான்.ராஜேந்திர சோழனுக்கு ‘கடாரம் கொண்டான்’ என்ற பட்டப்பெயர் உண்டு.*
இன்றைய மலேசியாதான் அன்றைய கடாரம். அதை வென்றதால் அந்தப்பெயர் வந்தது.
*உலகில் முதன்முதலில் கப்பல் படை வைத்திருந்தது ராஜேந்திர சோழன்தான்.*
மாவீரன் என்றால் நாம் அலெக்சாண்டரையும், நெப்போலியனையும்தான் சொல்கிறோம். அவர்கள் எல்லோருமே அவரவர் நாட்டுக்குள்ளேயே சண்டையிட்டவர்கள். *உண்மையில், ராஜேந்திர சோழன்தான் மிகப்பெரிய வீரன். ஆயிரம் கப்பல்கள், 60 ஆயிரம் யானைகள், 1.50 லட்சம் குதிரைகள், 9 லட்சம் சிப்பாய்களுடன் கடல் கடந்து சென்று தெற்கு ஆசியா முழுமையும் வென்றான்.*
கிட்டத்தட்ட 11 லட்சம் வீரர்களை கடல் கடந்து கொண்டு சென்றிருப்பானேயானால் எத்தனை நாடுகளை வென்றிருக்க முடியும்? அத்தனை பேருக்கும் எப்படி சாப்பாடு போட்டிருப்பான்? இது மாதிரியான போர்களை உலகத்தில் இதுவரை யாருமே நிகழ்த்தியதே இல்லை. *இதற்கெல்லாமே போதிய கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.*
*இன்றைய நிலையில் அமெரிக்கா, இந்தியா ராணுவத்தையும் சேர்த்தால்கூட 2 லட்சம் துருப்புகளைத் தாண்டாது.*
ஏதோ ஒரு காரணத்தினால் ராஜேந்திர சோழன் தவறவிட்டதன் விளைவுதான் கஜினி முகமது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டான்.
மாவீரன் ராஜேந்திர சோழனை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு கடந்த 2015, மார்ச் 15ம் தேதி தபால் தலை வெளியிட்டுள்ளது. அந்த தபால்தலையில், *‘உலகில் கப்பலை முதன்முதலாக உருவாக்கியவனும், பயன்படுத்தியவனும் ராஜேந்திரசோழன்’* என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு புதிய தகவல்.
நாம்தான் ராஜேந்திர சோழனைக் கொண்டாடுகிறோம். ஆனால் வட இந்தியாவில், இன்றைக்கும் கப்பலை கண்டுபிடித்தவன் சிவாஜிதான். அதே வட இந்தியன்தான் ராஜேந்திர சோழனுக்கு தபால்தலை வெளியிட்டிருக்கிறான். எனில், நான் ஏன் அவுரங்கசீப்பை படிக்கணும்? நான் ஏன் அக்பரை படிக்கணும்? நான் ஏன் அசோகரைப் படிக்கணும்?
தமிழ் அரசர்கள் மட்டுமின்றி தென்னிந்திய மன்னர்கள் பற்றிய பாடங்கள் எதுவுமே வடஇந்திய பாடப்புத்தகங்களில் இல்லை.
*இந்தியாவின் 60 சதவீத பகுதிகளை ஆட்சி செய்தவன் அசோகன். காஞ்சியில் உள்ள அசோகர் ஸ்தூபி கல்வெட்டில், ‘என்னால் தெற்கு பகுதியில் மட்டும் நுழைய முடியவில்லை. காரணம், சோழர்கள்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.*
அப்படி இருக்கும்போது *நாம் மட்டும் ஏன் இன்னும் அக்பரையும், அசோகனையும், ஷாஜகானையும் படிக்க வேண்டும்?*
அவர்களைப் பற்றி நம் பாடத்திட்டத்தில் ஏன் வைக்கிறார்கள்?
பெரிய கேள்வி எழவில்லையா? முதன்முதலாக *இப்போதுதான் ஒரு தமிழ் புத்தகத்தில் பென்னி குயிக் ஃபோட்டோ போட்டுள்ளனர்.* *வள்ளுவனையே நம்மால் அட்டையில் வைத்துக்கொள்ள முடியவில்லை.* அப்புறம் எப்படி வரலாறை சொல்லிக்கொடுக்க முடியும்?
*உலகையே ஆண்ட ராஜேந்திர சோழனுக்கு இதுவரை அரசு சார்பில் விழாக்கள் நடத்தப்படவில்லை.* இப்படி எவ்வளவோ சொல்ல முடியாத ஆதங்கங்கள் இருக்கின்றன.
இதை அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.
அவர்களாவது, உண்மையான வரலாற்றை படிக்கட்டும்,
வரலாற்றை படைக்கட்டும்,
வரலாற்றில் வாழட்டும்.


read more...
வரலாற்றை படிக்காத இனம் வாழாதுSocialTwist Tell-a-Friend

செவிவழி செய்தி

0 comments

சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது.
அது மழைநீரை தவிர மட்டுமே உண்ணும்
தரையில் விழுந்த நீரை உண்பதில்லை 
அவ்வளவு தூய்மையான நீரை விரும்புமாம் ..
அது போல
ராமன் போன்றவர்கள்
சீதையை போன்றவர்களை விரும்புவார்கள் ..
சூர்ப்பனகைகளை அல்ல ..
சீதைகள்
ராமன் போன்றவர்களை விரும்புவார்கள்
ராவணன்களை அல்ல
read more...
செவிவழி செய்திSocialTwist Tell-a-Friend

மனைவி_எப்படி_இருக்க_வேண்டும் ?

0 comments

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் #இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது. அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி.
#ஒரு_பெண்ணின்_மீது_காதல் கொள்ளும் போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்த காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே! உடல் இச்சையால் உந்தித் தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறி விடுகிறான். எந்த பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்கு பிடிக்கிறது. அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான். பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவளுக்கு வந்து சேருகிறாள்.
பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனது பார்வை லயித்து விட்டால், அந்த சரீரத்துக்குள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போய் விடுகிறது.
ஆனால், ஆத்மாவின் ராகம் கண்களை மட்டுமே கவனிக்கிறது. அவளது கருநீல கண்கள் அவனை பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனிதத் தன்மை வெளியாகிறது. அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.
#புனிதமான_அந்தக்_காதலை_அறியாதவர்கள், உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள். எதிர்காலக் குடும்ப நிம்மதியையும், ஆனந்தத்தையும் நாடும் இளைஞர்கள், சேவை செய்வதில் தாசியை போலவும், யோசனை சொல்வதில் மந்திரியை போலவும், அழகில் மகாலட்சுமியை போலவும், மன்னிப்பதில் பூமாதேவியை போலவும், அன்போடு ஊட்டுவதில் அன்னையை போலவும், மஞ்சத்தில் கணிகையை போலவும் உள்ள பெண்ணை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறது வடமொழியில் உள்ள ஒரு சுலோகம்.
#பார்ப்பதற்கு_லட்சுமி_மாதிரி_இருக்கிறாள் என்கிறார்களே, அந்த மகாலட்சுமியை போன்ற திருத்தமான அழகு அந்த பெண்ணுக்கு இருக்க வேண்டும். அழகு என்றால், முடியை 6 அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகு பின்னால் வருவோருக்கு தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும் பார்வைக்கு வைக்கும் நாகரீக அழகல்ல.
#காஞ்சீபுரம்_கண்டாங்கி_கட்டி, அரைக்கை ரவிக்கை போட்டு, ஆறடி கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துக்கு மஞ்சள் பூசி, குங்குமப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழகையே, மகாலட்சுமி போன்ற அழகு என்கிறார்கள். அத்தகைய பெண், பார்க்கும் போது கூட நேருக்கு நேர் பார்க்க மாட்டாள்.
எந்தவொரு #ஆடவனின்_அழகும்_ஒரு_பெண்ணின்_பார்வையில் திடீர் அதிர்ச்சியைத் தரும் என்றாலும், மகாலட்சுமி போன்ற குலப்பெண்கள் அந்த அதிர்ச்சிக்கு பலியாகி விடுவதில்லை. இடிதாங்கி, இடியை இழுத்து பூமிக்குள் விட்டுவிடுவது போல், அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவள் விரட்டி விடுவாள்" என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
மேலும் சில தகுதிகளும் மனைவியாக வரும் பெண்ணுக்கு வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். அவர், பெண்களுக்கு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும் பண்புகள்
கணவனது சினத்தை தணிக்கும் கருவியாக அவள் இருக்க வேண்டும். மாறாக, அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.
அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில் அவள் தாய் போல் இருக்க வேண்டும்.
பள்ளியறையில் அவள் கணிகையை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதாவது, கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்து உள்ளவளாக இருக்க வேண்டும்.
மீண்டும், மீண்டும் அவளையே பார்க்க வேண்டும் என்ற ஆசை கணவனுக்கு ஏற்பட வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொண்டவன் பெரும்பாலும் கெட்டுப் போவதில்லை; வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை என்கிறார் கண்ணதாசன்.
நல்ல பெண்ணை மணந்தவன் முட்டாளாக இருந்தாலும் அறிஞனாகி விடுகிறான். அவன் முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும் என்றும் கூறும் கண்ணதாசன், தவறான பெண்ணை ஒருவன் மனைவியாக்கிக் கொண்டாள் அவன் அறிஞனாக இருந்தாலும் முட்டாளாகி விடுகிறான், அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது என்றும் கூறுகிறார்.
#தாயைத்_தண்ணீர்த்_துறையில்_பார்த்தால், மகளை படிக்கட்டில் பார்க்க வேண்டாம் என்பார்கள். இதேபோல், தாயைப் போல் பிள்ளை, நூலைப் போல் சேலை என்பார்கள். அதாவது, தாயைப் போல் தான் அவளது மகளும் இருப்பாள் என்பது இதன் அர்த்தம். இன்றைய இளைஞர்கள் பெண்ணின் தாயை பார்ப்பது இல்லை. மனைவியாக வரும் பெண்ணின் வாளிப்பான அங்கங்களே அவனது நினைவை மயக்குகின்றன. இதனால் தான் பெற்றோர் பார்த்து மகனுக்கு பெண் தேட வேண்டும் என்கிறார்கள்.
#பெற்றவர்கள்_பெண்_பார்க்கும்_போது, பெண்ணின் குலம், கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்த பிறகுதான் பேசி முடிக்கிறார்கள். இத்தகைய நிதானமாக அறிந்து முடிக்கப்பட்ட திருமணங்கள், 100க்கு 90 சதவீதம் வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.
#ஆத்திரத்தில்_காதல்#அவசரத்தில்_கல்யாணம் என்று முடிந்த திருமணங்கள், 100க்கு 90 தோல்வியே அடைந்திருக்கின்றன. ஆகவே, ஆயுட்கால குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டும் என்றால், பெண் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்"என்கிறார் கண்ணதாசன்.
#தன்மானத்திற்காக_எதையும்_இழக்கலாம்_எதற்காகவும்தன்மானத்தை இழக்கக்கூடாது💪💪💪😷😷😷💞❣️💕.
மேலை து வெற்றிவேல் தேவன்
read more...
மனைவி_எப்படி_இருக்க_வேண்டும் ?SocialTwist Tell-a-Friend

பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம்

0 comments

***பாகம்-1***
கிபி1755மார்ச் மாதம் மணப்பறையில் உள்ள கள்ளர் படைப்பற்றை வென்று மதுரையில் உள்ள நாவாபின் மதுரை பிரதிநிதியான மியானாவை பிடிப்பதற்காக கர்னல் ஹெரானும்,கான் சாகிப் என்கிற மருத நாயகமும் மதுரைக்கு வருகிறார்கள்.
இவர்களுடைய வருகையையொட்டி மியான அங்கிருந்து தப்பி மதுரையில் இருந்து 8கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்குடி (திறம்பூர் என்பது அதனுடைய தொண்மையான் பெயர், மேலூருக்கும் மதுரைக்கும் நடுவில் ) என்கிற இடத்தில் ஒழிந்து கொள்கிறார்.



இதனால் கர்னல் ஹெரானும்,கான் சாகிப்பும் கோவில்குடியை நோக்கி செல்கிறார்கள். இதனை எதிர்பார்த்த மியானா மீண்டும் அங்கிருந்து தப்பி செல்கிறார்.
பின்பு மிகவும் தாமதமாக வந்த கர்னல் ஹெரான் கோவில்குடியில் உள்ள கள்ளர்கள் பூர்வீகமாக வணங்கக்கூடிய கோவிலை பார்த்து மியானாவை பிடிக்கும் சாக்கில் அந்த கோவிலை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.
கோவிலை சுற்றி காவலுக்கு இருந்த கள்ளர் பற்றுடன் சண்டையிட்டு அங்கிருந்த அனைத்து கள்ளர்களையும் கொன்றுவிட்டு பின்பு கொள்ளையடிக்க தயாராகிறார் கர்னல் ஹெரான்.
கான் சாகிப்புக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லாமல் கோவிலில் ஏறுவதற்கு ஏணி மற்றும் உபகரணங்கள் இல்லை என்றும் மேலும் மியானா இங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் எனவும் கூறுகிறார்.
ஆனால் இதனை ஏற்காத கர்னல் ஹெரான் அந்த கோவிலின் கோட்டை கதவை வைக்கோல் போரை வைத்து தீயிட்டு எரிக்க ஆணயிடுகிறார்.
இதனை ஏற்று கான்சாகிப்பும் படைவீரர்களும் தீயிட்டு கதவை தகர்த்து உள்ளே நுழைந்து இஷ்டம் போல் அனைத்தையும் சூரையாடி கோவிலை தரைமட்டமாக்குகிறார்கள்.
மேலும் கள்ளர்கள் காலங்காலமாக வழிபடும் அவர்களது சாமி சிலையை பேத்து எடுக்கிறார்கள்.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் இராபர்ட் ஓர்ம்,எஸ்.சி ஹிலும்,பிரிட்டீஸ் கவுன்சிலும் கடும் கண்டனமும்,வருத்ததையும் தெரிவிக்கிறார்கள். மேலும் கர்னல் ஹெரான் ஒட்டுமொத்த மிலிட்டரி விதிமுறைகளை மீறிவிட்டார் எனவும் குறிக்கிறார்கள்.
கொள்ளையடித்த கள்ளர்களின் சாமி சிலையை ஒரு பிரமாணரிடம் 5000 ரூபாய்க்கு கர்னல் ஹெரான் விற்க முனைகிறார் ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவு அறிந்த அந்த பிராமணர் ஏற்க மறுக்கிறார் இதனால் அந்த சாமி சிலையை கொள்ளையடித்த பொருட்களோடு சேர்த்து கட்டுகிறார்கள்.
பின்பு அங்கிருந்து மாமறவர் காத்தப்ப பூலித்தேவரிடம் சண்டையிட நெல்லையை நோக்கி செல்கிறார்கள்
இந்த சம்பவத்தால் மிகவும் உக்கிரம் அடைந்த கள்ளர் பழங்குடியினர் கர்னல் ஹெரானையும் அவனது படையினரையும்
எப்படி பழிதீர்த்தார்கள்....?
எப்படி தங்களுடைய சாமி சிலையை மீட்டார்கள்....?
என்பதை அடுத்த பாகத்தில் காண்போம்
நன்றி
War of coromandel
The rebel commandant by S.C Hill
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
read more...
பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம்SocialTwist Tell-a-Friend

ரீடர்ஸ் டைஜஸ்ட் படிச்சு என்ன பிரயோஜனம்?

0 comments

சிறுவயது முதல் கண்ணில் பட்ட நூல்களை எல்லாம் படித்துக்கொண்டே இருப்பேன். எட்டாம் வகுப்பில் ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிமுகமானது. அதன்பின் ஆங்கில நூல்களை படிக்க துவங்கி கோவை பழைய மார்க்கட் சென்று பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் எல்லாம் வாங்கி வருவேன்.
ஒரு கட்டத்தில் புத்தகம் வாங்க காசு கேட்க கடுப்பான அப்பா "ரீடர்ஸ் டைஜஸ்ட் எல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்? பாடபுஸ்தகம் படிச்சாலாவது பிரயோஜனம் உண்டு" என திட்டினார். அதற்கு என்ன பதில் சொல்வது என அப்ப தெரியவில்லை.
ஆனால் இப்போது யோசித்து பார்த்தால் நான் இந்தியாவில் படித்த பிகாம், எம்பிஏ இரண்டிலும் அந்தந்த பாடதிட்ட நூல்களை தாண்டி வேறு எதையும் படித்ததில்லை.
அமெரிக்க கல்லூரிகளில் எந்த இளங்கலை பட்டம் படித்தாலும் மாணவர்கள் மியூஸிக், உலக வரலாறு, புகைப்படக்கலை, நாடகம், சைக்காலஜி, சோஷியாலஜி, தத்துவம் என்பது போல ஜெனெரல் எடுகேஷன் கோர்ஸ்களை எடுக்க சொல்கிறார்கள். அந்த கோர்ஸ்கலை ஒரு வருடம் படித்தபின்னர் தான் அந்தந்த துறைசார் பாடங்களையே அவர்கள் படிக்க துவங்குகிறார்கள். நம் ஊரில் மூன்று வருடம் படிக்கும் இளங்கலை வகுப்புகளை அவர்கள் 4 வருடம் படிப்பது இதனால் தான்.
ஹை ஸ்கூல் போனபின்னர் கட்டாயம் ஸ்போர்ட்ஸ் எடுக்கவேண்டும். வருடம் 100 மணிநேரம் தொண்டுநிறுவனங்களில் தன்னார்வலர்களாக பணிபுரியவேண்டும். அது எல்லாம் கல்லூரியில் சேர உதவும். வெறும் மதிப்பெண், சர்ட்டிபிகேட் வைத்துகொண்டிருந்தால் பைசா பிரயோஜனம் இல்லை.
அக்கவுண்டன்சி மாணவர் எதுக்கு மியூசிக் ஆர்ட்ஸ் எல்லாம் படிக்கணும்? கணக்கு போட தெரிந்தால் போதாதா?
போதாது..ஏனெனில் பலதுறைகளில் கிடைக்கும் அறிவுதான் மாணவர்களை முழுமையான மனிதராக மாற்றும். அவர்கள் சிந்தனைதிறன் மேம்படும். கணக்கு மட்டும் போட தெரிந்த மானவன் குமாஸ்தா பொறுப்பை தாண்டி மேலே வரமுடியாது. நல்லதொரு குடிமகனான மட்டுமல்ல நல்லதொரு பணியாளனாக கூட ஆகமுடியாது.
அதனால் உங்கள் குழந்தைகள் பலதரபட்ட நூல்களை படிப்பதை உக்குவியுங்கள். வெளியே விளையாட அனுமதியுங்கள். ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை நண்பர்களை உருவாக்கிகொடுங்கள். முழுக்க பாடபுத்தகத்தையே மனப்பாடம் செய்யவைத்து அவர்களை இயந்திரம் ஆக்கிவிடாதீர்கள். பாடபுத்தகம், படிப்பை தாண்டி கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது
Neander Selvan
read more...
ரீடர்ஸ் டைஜஸ்ட் படிச்சு என்ன பிரயோஜனம்?SocialTwist Tell-a-Friend

வானம் பொழிகிறது, பூமி விளைகிறது

0 comments
"வானம் பொழிகிறது, பூமி விளைகிறது! உனக்கேன் கொடுப்பது கிஸ்தி"

இந்த வசனத்தை உண்மையில் பேசியது

 மதுரை #கள்ளர்கள். இது ஆங்கிலேயர் ஆவணத்தில் பதிவாகி உள்ளது.

இந்த வசனத்தை காப்பி அடித்து
 சம்மந்தம் இல்லாமல் 
கட்டபொம்மு பேசியதாக கதை அமைத்து.
அதையும்
 ஒரு கள்ளர் (சிவாஜி கணேசன்) வாயாலேயே 
பேச வைத்துவிட்டார்
 இயக்குனர் தெலுங்கு பந்துலூ.

Source :The Madura Country: A Manual.
read more...
வானம் பொழிகிறது, பூமி விளைகிறதுSocialTwist Tell-a-Friend

***இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்

0 comments

கிபி1645ல் திருநெல்வேலியில் உள்ள புதுப்பட்டியில் உள்ள பாளையக்காரர் ஒருவரால் 1000 இடையர் சமூக குடும்பங்களை பல இன்னல்களுக்கு உட்படுத்தி ஒடுக்கி வைத்திருந்துள்ளார்
இதனை அறிந்த திருமலை நாயக்கர் பிறமலைக்கள்ளர் சமூகத்தை சேர்ந்த பின்னத்தேவரை அழைத்து அந்த பாளையக்காரரை அடக்கி அந்த 1000 இடையர்
குடும்பங்களை மீட்டு வரும் படி ஆனையிடுகிறார்.
இதனை ஏற்றுக்கொண்ட பின்னத்தேவர் மதுரையில் இருந்து தனது படைகளுடன் திரு நெல்வேலியை நோக்கி படையெடுக்கிறார்.
பின்னத்தேவர் திருநெல்வேலி புதுப்பட்டியை அடைந்தவுடன் அங்கு இருந்த பாளையக்காரருடன் போரிடுகிறார், போரில் அந்த பாளையக்காரை வெற்றியும் அடைகிறார்.
பின்பு அந்த பாளைக்காரரின் ஒடுக்குதலில் இருந்த 1000 இடையர் குடும்பங்களை மீட்டு அவர்களை பாதுகாப்பாக மதுரைக்கு அழைத்து வருகிறார் பின்னத்தேவர்.
பின்னத்தேவரின் இத்தகைய வீரத்தை பார்த்த திருமலை நாயக்கர் இடையர் சமூகத்தை மீட்டதால் மதுரையை சுற்றியுள்ள இடையர் சமூகத்தவர்களின் பாடிக்காவல் உரிமையை பின்னத்தேவருக்கும் அவர்தம் வாரிசுகளுக்கும் அளிக்கிறார்.
இதன் மூலமாக பின்னத்தேவர் மதுரை இடையர் சமூகத்தவரின் அன்புக்குரிய ஆஸ்தான காவல்காரராக ஆகிறார்.
பின்னத்தேவர் குடும்பத்தினரின் இந்த காவல் உரிமை பிற்காலத்தில் பிரிட்டீஸாரால் பறிக்கப்பட்டு பிரிட்டீஸார் அவர்களுடைய நேரடி நிர்வாகத்திற்கு அந்த இடையர் கிரமாங்களை கொண்டுவந்தனர்.
குறிப்பு: குற்றப்பரம்பரை சட்டம் பிறமலைக்
கள்ளர்கள் மீது புகுத்த முக்கிய காரணம்
அவர்களது மதுரை சுற்றிய காவல்
உரிமையை பறிப்பதற்கே.........!
நன்றி
A SOUTH INDIAN SUB CASTE BY
DR.LOUIS DUMONT (French Anthropologist)
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
read more...
***இடையர் சமூகத்தை காத்த பின்னத்தேவர்SocialTwist Tell-a-Friend

கலப்பு திருமணம் G O

0 comments
ஜாதி விவகாரத்தில் இப்படி முடிவெடுப்பது சரியா ?
இந்த அரசாணையை நீக்க சொல்லி ஏன் சாதி சங்கங்கள்
குரல் கொடுக்கவில்லை ?
ஜாதியற்றவராக அறிவிக்கலாம் 
மற்ற சாதியில் சான்றிதழ் கொடுக்க சொல்வது என்ன நீதி ?
-----------------------------------------------------------------
கலப்பு திருமணம்
----------------------------------------------------------------
செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு
பெற்றோரின் விருப்பப்படி
எவரேனும்
ஒருவரின் ஜாதி அடிப்படையில்
ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.
(அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)
முதலமைச்சர் மு.கருணாநிதி
read more...
கலப்பு திருமணம் G OSocialTwist Tell-a-Friend
0 comments
தலை வலியும் நோயும்
தனக்கு வந்தால் தான் தெரியும்.
தாய்மாமன் வீட்டில் கூட எல்லாம் சரிக்கு சரியாக இல்லை என்றால் பெண் தருவது இல்லை.
இதிலே எவனோ பெத்து வளர்த்து படிக்க வைத்தால் நோகாமல்
( கரையான் புத்து கட்ட கருநாகம் குடி புகுவது போல்) அடுத்தவன் வீட்டில் புரட்சி செய்ய வந்திருவானுக. அவன் வீட்டு பிள்ளைகளை புரட்சி செய்யட்டுமே.
---மணவாளன் பாண்டியன்
--------------------------------------------------------------
அரசாங்கமே ஜாதி பாத்துதான் வேல கொடுக்குது...
தான் பெத்து கஷ்டம் தெரியாம வளர்த்த பெண் பிள்ளையை தன்னோட ஜாதி ல
கொடுக்கணும் னு அப்பன் நினைக்குறதுல தப்பே இல்ல... எந்த
அப்பனும் தன் மகள் நல்லா சந்தோசமா கௌரவமா வாழணும்தான் ஆசைப்படுவான்..
பெண் பிள்ளைகள் பெற்றோரை புரிந்து கொண்டு நாடகக்காதலை ஏற்க கூடாது..
அதுக்கு கொலை பண்ணுவாங்களனு ஒரு சில அறிவாளிங்க கேட்கலாம்...
அசிங்கமும் அவமானமும் அவனவனுக்கு வந்தாதான் தெரியும்...
புரட்சியை விரும்பும் புண்ணாக்குகள் அந்த புரட்சியை தங்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்கலாம்...
-----------------------------------------------------------------
சாதிகளில் ஏற்றதாழ்வு இருக்க கூடாது
என்று சொல்லி
ஆட்சி நடத்திய
திராவிட கட்சிகள்
ஏன் சலுகைகளில் ஏற்றதாழ்வு இருக்ககூடாது
என்று சொல்வதில்லை
Senthil Mmk
read more...
SocialTwist Tell-a-Friend

சக்கரவாகம்

0 comments
செவிவழி செய்தி
சக்கரவாகம் என்ற ஒரு பறவை ஆகாயத்திலேயே பறந்து சஞ்சரிக்கின்றது.
அது மழைநீரை தவிர மட்டுமே உண்ணும்
தரையில் விழுந்த நீரை உண்பதில்லை 
அவ்வளவு தூய்மையான நீரை விரும்புமாம் ..
அது போல ராமன் போன்றவர்கள்
சீதையை போன்றவர்களை விரும்புவார்கள் ..
சூர்ப்பனகைகளை அல்ல ..
சீதைகள்
ராமன் போன்றவர்களை விரும்புவார்கள்
ராவணன்களை அல்ல

read more...
சக்கரவாகம் SocialTwist Tell-a-Friend

இப்படிதான் முகநூலில் முக்குலத்தை சிதைக்கின்றனர்

0 comments

அருண் மொழி சோழன் தேவர்
--------------------------------------------
நேரம்பள்ளனுக்கு மறவனை திட்ட வேண்டும் என்றால்
முக்குலத்தில்
மத்த இரண்டு பேரின்
அதாவது கள்ளராகவோ அகமுடையாராகவோ
போலி ஐடியில் வந்து
மறத்தியை திட்டுவான்க
அதே போல் பறையனுக்கு
கள்ளனை திட்ட வேண்டும் என்றால்
மறவனாகவோ அல்லது
அகமுடையானாகவோ
போலி ஐடியில் வந்து.
கள்ளச்சியை திட்டுவானுக
துளுவ வெள்ளாளர்கள்
உங்களுக்கு முன் உரிமை கொடுப்பதில்லை
என்று அகமுடையானை
மனம் மாற்றிக்கொண்டு இருக்கின்றான்
read more...
இப்படிதான் முகநூலில் முக்குலத்தை சிதைக்கின்றனர்SocialTwist Tell-a-Friend