எங்கு தோன்றினோம்...

12 comments
ஒரு சமூகம் முன்னேற்றம் கண்டு பீறுநடை போடுகிறது என்றால் அந்த சமூகத்திற்குத் தலைமை தாங்கி எழுச்சியை வழிநடத்தும் பெரியோர்களின் உழைப்பும் ஓயாத சமூக சிந்தனையுமே காரணமாக முடியும் அதைப் போல் ஒரு சமூகம் வீழ்ந்து கிடக்கிறதென்றால் அதற்குப் பொறுப்பாக அந்தச் சமூகத்திற்கு ஏற்பட்ட இடையூறுகள் தான் காரணமாக முடியும்......இலட்சியம் இல்லாத மனித வாழ்வு ஆழ்கடலில் துடுப்பு இல்லாமல் செல்லும் படகு போன்றது.
எங்கு தோன்றினோம்...



கல் தோன்றி, மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியான தமிழ் குடியின் முதுகுடியினர் பிரமலைக்கள்ளர்கள் (முக்குலத்தோர்) தோன்றிய பகுதி





1.               நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற திட்டத்தின் கீழ் மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் பணிபு¡¢யும் பேராசி¡¢யர் பிச்சப்பன் அவர்களன் தலைமையில் ஆய்வு செய்த மரபியல் அறிவியல் விஞ்ஞானிகள் மதுரை உசிலம்பட்டி அருகில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிற்றூ¡¢ல் முக்குலத்தினா¢ன் ஒரு பி¡¢வான பிரமலைகள்ளர் இனத்தை சேர்ந்த விருமாண்டி ஆண்டித்தேவர் என்பவா¢டம் மரபியியல் ஆய்வு செய்த போது "எம்130 டி.என்.ஏ" கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒத்த மரபணு  ஆப்பி¡¢க்க மக்களிடமும் ஆஸ்திரேலிய அப்ராஜீன் மக்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கும், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா போன்ற நாடுகளிலும்  "எம்130 டி.என்.ஏ" இருப்பதாக டாக்டர். பிச்சப்பன் 2008 ஆம் வருடம் அறிவித்தார். மேலும் அவர்கள் ஆப்பி¡¢க்காவில் இருந்து 70000 ஆண்டுகளுக்கு முன்பு தென்இந்தியாவில் பிரமலைக்கள்ளர்கள் குடியேறியதாக கூறுகின்றனர்.  ("More than half of the Australian aborigines carry this M130 gene. The marker is also present among some people in Philippines and the tribals of Malaysia," said Dr Pitchappan.)



2. ஆப்பி¡¢க்காவில் உள்ள சில பழங்குடியினர், ஆஸ்திரேலிய பழங்குடியினர், யூதர்கள், அரேபிய பழங்குடியினர் போன்றவர்களிடம் இருந்த சுன்னத் செய்யும் பழக்கம் பிரமலைக்கள்ளர் சமூகத்திடம் வழக்கத்தில் இருந்தது.



3. ஆப்பி¡¢க்காவில் சில பகுதிகளிலும், ஆஸ்திரேலியாவிலும் பழக்கத்தில் இருந்த "வளைத்தடி" (பூமராங்) பிரமலைக்கள்ளர்களிடம், புதுக்கோட்டை கள்ளர்களிடமும், வழக்கத்தில் இருந்தது.

அந்தக் காலத்தில் வளரி அல்லது வளைத்தடி என்ற ஆயுதமே கள்ளர்களின் பிரதான ஆயுதமாக இருந்திருக்கிறது. ஒருமுனை கனமாகவும், மறுமுனை இலோசாகவும், கூராகவும் ஒரு பிறைவடிவில் மரத்தினால் அல்லது உலோகத்தினால் இக்கருவி செய்யப்படுகிறது. இந்த மக்கள் இன்றும் தமது வீரர்களுக்கு(முன்னோர்களுக்கு)  செய்யும் ஆயுத பூசையில் (முன்னோர் நினைவு வழிப்பாட்டில்)வளா¢யை காணிக்கையாக வைத்து வழிபடுகின்றனர்.

வளைத்தடியின் மேம்படுத்தப்பட்ட வடிவம் வளரி என்ற ஆயுதமாக முக்குலத்தோர் அனைவரும் போர்களத்தில் 19ம் நூற்றாண்டு வரை பயன்படுத்தினர். சின்ன மருது வளா¢ வீசுவதில் வல்லவர் என்பது சரித்திரம் அறிந்தவர் அனைவருக்கும் தெரிந்த  உண்மை. ராமநாதபுரம் சேதுபதிகளின் அரண்மனை இல்லத்தில் அவர்களுடைய படைகளில் பயன்படுத்திய வளரிகள்  இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



இந்த மூன்று அடிப்படை கருத்துகளின் ஊடாக செல்லும் ஒரு செய்தி உண்டு. அது என்னவென்றால்  நமது இனம் எங்கு தோன்றியது என்பதை பற்றியதாகும். நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற ஆய்வின் கருத்தான ஆப்பி¡¢க்காவில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல. பழந்தமிழ் ஏடுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் காபாடபுரமும், தென்மதுரையும், ப·றுளி ஆறும் கொண்ட பரந்த நிலப் பரப்பான இன்றைய இந்திய பெருங்கடலின் அடியில் மூழ்கி கிடக்கும் குமா¢கண்டமே மனித இனம்

தோன்றிய இடம் எனும் கருத்துக்கு எடுத்துச் செல்கிறது.




குமா¢கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆப்பிரி க்க, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான்  "எம்130 டி.என்.ஏ" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 ன் கருத்துகள் முக்குலத்தோர் குமா¢கண்டம் பகுதியில் தோன்றி பரவினர் என்பதை உறுதிபடுத்துகிறது.



இந்த மூன்று அடிப்படை கருத்துகளின் ஊடாக செல்லும் ஒரு செய்தி உண்டு. அது என்னவென்றால் நமது இனம் எங்கு தோன்றியது என்பதை பற்றியதாகும். நேஷனல் ஜீயோகிராபிக் தொலைகாட்சியின் "மனித இனத்தின் பயணம்" என்ற ஆய்வின் கருத்தான ஆப்பி¡¢க்காவில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது அல்ல. பழந்தமிழ் ஏடுகள் மற்றும் இலக்கியங்கள் கூறும் காபாடபுரமும், தென்மதுரையும், ப·றுளி ஆறும் கொண்ட பரந்த நிலப் பரப்பான இன்றைய இந்திய பெருங்கடலின் அடியில் மூழ்கி கிடக்கும் குமரி கண்டமே மனித இனம்

தோன்றிய இடம் எனும் கருத்துக்கு எடுத்துச் செல்கிறது.

குமரி கண்டம் கடலில் மூழ்கிய போது மனித இனம் ஆப்பிரி க்க, ஆஸ்திரேலிய, இந்திய பகுதிகளுக்கு சிதறியதால் தான் "எம்130 டி.என்.ஏ" மேற்கண்ட பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. 2 மற்றும் 3 ன் கருத்துகள் முக்குலத்தோர் குமரி கண்டம் பகுதியில் தோன்றி பரவினர் என்பதை உறுதிபடுத்துகிறது.
read more...
எங்கு தோன்றினோம்...SocialTwist Tell-a-Friend

மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?

0 comments
First Published : 10 Dec 2010 12:18:00 AM IST


கோவையில் முஸ்கின், ரித்திக் எனும் இரு மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்டதும், சென்னையில் கடத்தப்பட்ட மாணவர் கீர்த்திவாசனை போலீஸாரே பணம் கொடுத்து மீட்ட சம்பவமும் அண்மையில் அடுத்தடுத்து நடந்தன. இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதையடுத்து, பள்ளிகளுக்கு மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான சுற்றறிக்கைகளை தமிழக அரசு அனுப்பியுள்ளது. கல்வி நிலையங்களையும் கண்காணித்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு போலீஸாரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
 உண்மையில், மாணவிகள் கடத்தல் தொடர்கதையாகவே உள்ளது. இது, நாள்தோறும் எங்காவது ஓரிடத்தில் அன்றாடம் நடைபெற்றுவரும் சம்பவமாகவே ஆகிவிட்டது. மாணவிகளை இளைஞர்கள் அல்லது உடன் படிக்கும் மாணவர்களே ஆசை வார்த்தை கூறி காதலில் வீழ்த்தி, திருமணம் செய்துகொள்வதே இப்போதைய "வீர விளையாட்டு'. 
 மாணவிகள் கடத்தப்பட்டால் பெற்றோர்கள் பலர் தங்களது குடும்ப கௌரவத்தை மனதில் கொண்டு போலீஸில் புகார் தெரிவிப்பதில்லை. வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், இத்தகைய செய்திகளைப் பத்திரிகைகளும் ஊக்குவிப்பதில்லை. இவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளோருக்கு சில நாள்கள் பொழுதுபோக்காகப் பேசப்படும் விஷயமாகவே இருக்கும்.
 ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் இவ்வகை கடத்தல்களில் சிக்கி, தங்களது எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றனர். பெற்றோருக்குப் பயந்து காதலனோடு ஊரைவிட்டு வெளியூர் செல்வதால், இவர்களின் கல்வியும் தடைபடுகிறது.
 "ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்' என்பதற்கேற்ப இவர்களில் பலர் கொஞ்சநாளில் கணவனைவிட்டுப் பிரியும் நிலையும் ஏற்படுகிறது. அப்போது இவர்களைப்  பெற்றோர்கள் அரவணைப்பதில்லை. தடைபட்ட கல்வியால் சரியான வேலைவாய்ப்புக் கிடைக்காமலும், அன்றாட வாழ்க்கையை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே நடத்தியும் வருகின்றனர்.
 இதுமட்டுமன்றி, மாணவிகளோடு நெருக்கமாகப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அவர்களது பெற்றோர்களிடம் பணம் பறிக்கும் விஷமிகளும் உண்டு.
 இன்டர்நெட், திரைப்படங்கள், சின்னத்திரை மெகா சீரியல்கள், குடும்பப் பிரச்னைகள், பெற்றோர் அரவணைப்பு இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் இளம்வயதுக் காதல் அதிகரித்து வருகிறது.
 கல்வி நிலையங்களில் வாரந்தோறும் மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வந்த "நீதிபோதனை' வகுப்புகளும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுவிட்டன. இயந்திரமயமான உலகில் தம்பதி, பணிக்குச் சென்றுவிடுவதால், தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போ அல்லது கண்டிப்போ காட்டுவதில்லை. இதனால், அவர்கள் மீது மாற்றுப் பாலினத்தவர் செலுத்தும் அன்பு காதலாக மாறுகிறது. அது அன்பா(!) அல்லது விஷமா(?) என்பது அவர்களுக்கே புரிவதில்லை. அப்பாவி மாணவிகளின் வாழ்க்கையும், கனவுகளும் சிதைக்கப்பட்டு வருகின்றன.
 மாணவர்கள் செல்போன்கள் எடுத்து வருவதை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும். கல்வி நிலையங்களுக்கு அருகே செயல்படும் பிரத்தியேக தொலைபேசி நிலையங்களும், செல்போன் ரீசார்ஜ் கடைகளும் உண்டு. இவற்றை கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளே கண்காணித்து, தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அதேநேரத்தில், மாணவர்களின் பெற்றோரும் தங்களது ஓய்வுநேரத்தில் தங்களது பிள்ளைகள் மீது அரவணைப்போடு இருத்தல் வேண்டும். பிள்ளைகளுக்குத் தெரியாத விதத்தில் அவர்களைக் கண்காணித்து, கண்டிப்பும் செலுத்த வேண்டும்.
 பஸ் நிலையங்கள், திரையரங்குகள் ஆள்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் ஜோடியாகப் பேசுவதை மக்கள் தடுக்க வேண்டும். யாரோ.. எவரோ நமக்கு ஏன் வம்பு என்று இருந்துவிடாமல், அவர்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கோ அல்லது அவர்களது பெற்றோருக்கோ தகவல் தெரிவிக்கலாம்.
 இதோடு, முக்கிய இடங்களில் சந்தேகப்படும்படியாகத் திரியும் ஜோடிகளை போலீஸாரே விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களிலும் கூடுதல் போலீஸாரை நியமித்து, இப்பணியில் ஈடுபடுத்தலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு மாணவர்களுக்கு கவுன்சலிங் அளிக்கலாம்.
 எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறாமல் இருப்பதற்காக, மாணவிகள் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையே இப்போது உடனடித் தேவை! ஏனென்றால் "பெண்கள்தான் நாட்டின், வீட்டின் கண்கள்'.
thanks to http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=344140&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE?
read more...
மாணவிகள் கடத்தல் தடுக்கப்படுமா?SocialTwist Tell-a-Friend