ஒரு சாதாரண மனிதனின் பசும்பொன் பயணம்

ஒரு சாதாரண மனிதனின் பசும்பொன் பயணம் 
அக்டோபர் 30 ஆம் அன்று பசும்பொனில் இருக்க வேணும் என்று திட்டம் .....
அக்டோபர் 29 சென்னை மாநகரில் இருந்து வெயில் அலைபேசியில் அழைக்கிறார்..
நள்ளிரவு நாலு மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சந்திப்பதாக திட்டம் ..

இரவு மழையுடன் புறப்பட்டு மதுரை மாநகரை நோக்கி ......
மதுரை நோக்கி செல்லும் வழி அனைத்தும் காவல் துறை கண்காணிப்பு கடும் பரிசோதனை ...எதற்கு இவ்வளவு பரிசோதனை ......பாதுகாக்கவா???...

எல்லா வாகனத்தையும் வீடியோ பதிவு ...
தனி வாகனத்தில் செல்பவர்கள் புறப்படும் பகுதியில்  காவல் நிலையத்தில் பதிவு இது எதற்கு பாதுகாக்கவா??...
வேறு எதற்க்குமா  ?.......

ஒரு வழியாக மதுரை சென்று அடைந்து அருப்புக்கோட்டை வழியாக தும்மு சின்னன்பட்டி எனும் அந்த அழகிய சிறு கிராமத்துக்கு வெய்லணன் உடன் சென்று அடைந்தேன் ...
இது வரை ஒரு சாதாரண பயணம் ..

இனி மேல் தான் பல ஆச்சரியங்களை சந்தித்தேன் .....
பத்திரிக்கைகளை பல படி எழுதி வருகிறார்கள் ....
முக்குலத்தோர் முரடர்கள் , கலவரம் செய்பவர்கள் தேவர் ஜெயந்தி நாட்களில் மது அருந்தி ஆடி கொண்டு பொது இடங்களில் முரட்டு தனமாக நடந்து கொள்பவர்கள் என்று ஒரு பிம்பத்தை மீடியா உருவாக்கி இருக்கிறது ...

தமிழகத்தின் மற்ற பகுதி மக்கள் தேவர் ஜெயந்தி என்றால் தென் தமிழகத்தில் கலவரமாக இருக்கும் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர் ...

ஆனால் உண்மை நிலை என்ன ?...
என்ன ஆச்சரியம் .......
நான் பார்த்தவரை மது அருந்திய தேவர் பெருமக்களை ஒருவரை கூட பார்க்கவில்லை .....
மது அருந்தி தரம் தாழ்ந்த மக்கள் இருக்கும் இடத்தில மகளிர் இருப்பதில்லை ....இருக்கமாட்டார்கள் ...இது நீங்கள் அறியாததில்லை

ஆனால் பசும்பொன்னில் என்ன நிலவரம் ...
தேவர் பெருமக்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர் ..
தாய், தந்தை , மகள் , மகன் ,வயதுவந்த பெண்பிள்ளைகள் ,வயது முதிர்ந்த பெண்மணிகள் ,உடல் ஊனமுற்ற ஆண் பிள்ளைகள் ,முளைச்சு மூணு இலை விடாத குழந்தைகள் என ஒரு கிராமத்து திருவிழா போன்று இருந்தது ....

வேறு குற்றம் செய்கிறார்களா ?
இல்லை ....

என்னது இல்லையா ?  பொய் சொல்லாதீர்கள் என்கிறீர்களா ?
இல்லை நண்பரே .....

பொய்சொல்லவில்லை ....எந்த ஒரு அரசியல் கட்சி கூட்டதிற்கு செல்லும் தொண்டர்கள் எப்படி உற்சாகமாக இருப்பார்கள் ...அது போன்று தான் இருக்கிறார்கள் ...

எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேராக செல்லவில்லை ???? நாம் போனால் குற்றமா ???

எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொண்டர்கள்  வாகனத்தின் மேல்
ஏறி செல்ல வில்லையா???
நாம் சென்றால் மட்டும் குற்றமா ???

எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொணடர்கள்  கட்சி கொடியை தலையில் கட்டிசெல்லவில்லை....??? நாம் தலையில் மஞ்சள் துண்டு கட்டினால் கையில் மஞ்சள் ரிப்பன் கட்டினால் குற்றமா ???

ஆக இரு சக்கர வாகனத்தில் செல்வது , வானில் சத்தமிட்டு செல்வது தலையில் ரிப்பன் கட்டி செல்வது எப்படி குற்றாமாகும் ???

இது மக்கள் கூட்டமாக ஓரிடம் செல்லும்போது இயல்பாக ஏற்படுவது.

வேளாங்கண்ணி நோக்கிவருடம் தோறும்  கிருஸ்துவ பெருமக்கள் கூட்டமாக பாதயாத்திரை செல்லும் போது இந்திய நாடு சமைய சார்பற்ற நாடு அதனால் போது இடத்தில் செல்லும் போது அரசு இது போன்ற கட்டுப்பாடு விதிக்க முடியுமா ???
தேவர்கள்  மீது மட்டும் ஏன் இந்த அடக்குமுறை ....?

அடுத்தாக பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மூன்று நாள் திருவிழா எனும் போது நான் பார்த்தவரை ஒரு நாளில் 20  லட்சம் மக்கள் கூடி கலைகிறார்கள் ....
மக்கள் நிம்மதியாக தேவரை தரிசிக்க முடியவில்லை ......
ஏன் ???
அரசு எந்திரம் வேறு எந்த விழாவும் நடத்திய தில்லையா ???
ஏன் ???
ஏன் ஒரு கட்டுப்பாடான நிர்வாக செயல்பாடு இல்லை ???
தேவர்களை காட்டுமிராண்டிகளாக மீடியாகளுக்கு சித்தரிக்க
ஒரு வாய்ப்பாக இந்த திருவிழாவை அரசு பயன்படுத்திக்கொள்கிறதா???
அப்படிதான் தெரிகிறது .........

இனி மக்களின் உணர்வுகளை பார்போம் ...

தேவர்களின் உணர்வு படி அவர்கள் ஒரு தலைவனின் விழாவுக்கு செல்லவில்லை .......
ஆம் அவர்கள் விழாவுக்கு செல்லவில்லை ....
அவர்கள் தேவர்களின் தேவனை
தேவ சேனாபதியை
அந்த
கந்தபெருமனை
அவர்களின் கண்ணின் மணியாகிய
அவர்களின் கண்முன் நடமாடிய முருகபெருமனை வழிபட செல்கிறார்கள் ...
அவர்கள் பாண்டிய குலத்தை காத்த தலைவனை காண சென்றார்கள்.

தன்னுடைய சுகங்களை தமக்காக இழந்த திருமகன் வாழும் இடத்துக்கு ......பரம்பரை பரம்பரையாக
நன்றி மறவாத இனத்தை சேர்ந்த அந்த மக்கள் ...
நன்றிகடனாக
செய் நன்றி மறவாத உயர்குணமுடைய தேவர் பெருமக்கள்
தேவரின் திருவடியை சேவிக்க செல்கிறார்கள் ....
அவர்கள் இந்துவாக கிறிஸ்துவராக செல்லவில்லை .......
தேவராக ....
இரத்த  சொந்தத்துக்காக செல்கிறார்கள் ...
அந்த செந்தில் வேலனின் அவதாரத்துக்கு மொட்டை போட்டு  செல்கிறார்கள்..

வந்த உறவுகள் பசியால் வாடிவிட கூடாது என்று
வாண்டையார் , வெள்ளைசாமி தேவர் ,சேதுராமன் ,அரசகுமார் போன்ற மற்றும் பெயர் தெரியாத மூத்த உறவுகள் அன்னமிட்டனர் ..
அன்னமிட்ட கைகளுக்கு தேவர் பெருமக்கள் வாழ்த்துகூறி சென்றனர்.
அவர்கள் இட்ட அன்னத்தின் பெருமையை மனமகிழ்ந்து கூறி
அனைவரும் அனைவரையும் அன்னமுன்ன அழைத்தனர் .

மதுரை தொடங்கி ஊர் எங்கும் தோரணம் ,
தேவர் புகைப்படம் உள்ள வீடு எங்கும் மலர்மணம்,
தெரு எங்கும் தேவர் புகழ் மணக்கும் நாட்டுபுற பாடல்கள் .
,சிலைகள் எங்கும் பால்குடம் .

ஓ இதுதான் தேவலோகமா ?...

காண கண் கோடி வேண்டும் ..
திசை எங்கும் தேவர் புகழ்....

ஊர் எங்கும் பசும்பொன்னுக்கு சென்றீர்களா என ஒருவரை ஒருவர் விசாரிக்கிறார்கள் ..

பெண்மக்கள் , சிறுவர்கள் முதல் பெரியவர் வரை உற்சாமாக பசும்பொன்னை நோக்கி செல்கிறார்கள் ..
செல்லும் வழி எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் ...

பசும்பொன் பயணத்தில் நான் கண்டது
அவர்கள் தேவர்கள் முருகனின் அவதார திருநாளை கொண்டாடுகிறார்கள் ...
அவர்கள் கொண்டாடுவதை மற்ற இன மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் ......
மூத்தவர்களுடன் உரையாடியதிலிருந்து மற்ற இனமக்கள் தேவர் இருந்தவரை பாதுகாப்பாக இருந்ததாக சொல்கிறார்கள் .......
தேவர் ஒரு தூய்மையான அப்பழுக்கற்ற துறவி என கூறுகிறார்கள் ..
குறள் கூறுகிறது
"அந்தணர் என்போர் அறவோர் "
"அவரவர் எச்சத்தால் காணப்படும் "

புரிந்தவர் புரிந்து கொள்க
 
ஒரு சாதாரண மனிதனின் பசும்பொன் பயணம்SocialTwist Tell-a-Friend

4 comments:

theiva said...

makkalin unarvu nan padikkumpothu enathu ooril nangal nadathiya thevar jeyanthi vizha kanmunne vanthathu.....

theiva said...

ithu ungaludaya payanama? sir

Unknown said...

super

Unknown said...

devar kulam emathu mukkulam