The Saftey Wall Theory-

காசி பாண்டியன் அம்பநாடு மறவர்
குடிமக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் பழக்கம் வெள்ளைக்காரனிடம் இருந்து வந்தது.. காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தவனும் ஆங்கிலேயேனே..
தெய்வீகத் திருமகனார் கூறியது போல் இந்த சுதந்திரம் என்பது போலியானது.. சுதந்திரத்திற்கு பின்னும் ஆங்கிலேயர்களின் அதிகாரம் திரைமறைவில் காங்கிரஸ் மூலம் அரங்கேறியது..
காங்கிரசின் வரலாற்றை "பட்டாபி சித்தாராமைய" எழுதியதில் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
உமேஸ் சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory "-யை கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "Allan Octavian Hume"-யின் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.
கடந்த 70 ஆண்டு கால அரசியலை சற்று ஆராய்ந்து உற்று நோக்கினால் மேலே கூறியது புலப்படும்.. பண்டைய பாண்டிய சோழ சேர சாம்ராஜ்ய ஆயிரமாயிரம் ஆண்டுகள் வரலாற்றை அறவே அழித்து போலி வரலாற்றுகளை உருவாக்கி போலியை பாடப் புத்தகங்களில் அரங்கேற்றி மக்களை முட்டாள்களாக்கி ஒருவருக்கொருவர் வன்மத்தை உருவாக்கி நாட்டை நாசக்காடாக்கினார்கள்..
மீண்டும் சொல்கிறேன் நான் பாஜக ஆதரவாளன் கிடையாது..
வீரத்திருமகன் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் தெய்வீகத் திருமகன் முத்துராமலிங்கத் தேவர் கொள்கையை போற்றுபவன்..
இந்தியாவின் வளர்ச்சியை ஒருபோதும் விரும்பாது அந்நிய ஆதிக்க சக்தி.. அந்த ஆதிக்க சக்திக்கு ஒரு இந்திய பிரஜை துணை போவது என்பது தனக்கு தானே குழிபறிப்பது போலாகும்..
இதில் அந்நிய மதச்சாயம் பூசினால் தான் நீ பழிகடாவாவது என்பதல்ல..
அந்நிய அயோக்கிய சக்தியின் கைத் துப்பாக்கிகளாய் செயல்படும் காங்கிரஸ் மற்றும் திராவிட அரசியலாளர்களின் சதி திட்டங்களுக்கு தோட்டாக்களாய் நீ செயல்பட்டாலும் அது உன் சந்ததியின் அழிவுக்கு வழிவகுக்கும்....
இந்திய சுதந்திரத்திற்கு பிறகும் அடிமைப்பட்டு கிடப்பது தமிழகமே..
மறக்க முடியாது மாமறவர்களை ஒடுக்க நினைத்த காங்கிரஸை தடம் தெரியாது அழிப்பதே தேவர் சமுதாயத்தின் குறிக்கோளாக இருக்கட்டும்..
வீரத்திருமகன் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மற்றும் தெய்வீகத் திருமகன் முத்துராமலிங்கத் தேவர் கொள்கையை போற்றி
#புலிக்கொடி இந்நாட்டை என்று ஆள்கிறதோ அன்று தான் இந்நாட்டிற்கு முழுச் சுதந்திரம் ..#AIFb
The Saftey Wall Theory-SocialTwist Tell-a-Friend

No comments: