பெரியார்

Inba Muthuraj அவர்கள் பதிவு (முழுசா படிங்க ...)

இன்று பெரியாரை வாழ்த்துவோர் பலரை பார்க்கிறேன். தன்னை பெரியாரின் பேத்தி என்றும், பேரனென்றும் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.
-------------------------------------------------
"பெரியாரோட 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை படிங்க சகோ.
என்று பிறருக்கு வகுப்பெடுத்து
தன் மனைவியின் பர்தாவை சரியவிடாமல் பார்த்துக்கொள்கின்றனர்,
----------------------
ஐந்து வேளை தொழுகையை முடித்தும், தேவாலயத்தில் முட்டி வலிக்க பிரார்த்தனை செய்துவிட்டும்,
"அதுல பார்ங்க தோழர்
பெரியாரோட மூட நம்பிக்கை ஒழிப்பை
நீங்க உள்வாங்கணும் தோழர்" என முக்கி கத்துகிறார்கள்.
-----------------------------------------------
இன்னும் சிலர்,
"பெரியாரோட சுயமரியாதை தத்துவம் இருக்கிறதே... அத அடிச்சுக்க இந்தியாவிலயே
வேறு எந்த இதிகாசமும் இல்லேங்க"
என்று கூறிய படியே
ஸ்டாலினுக்கு வாழ்க கோசம் போடுவதோடு
அவர் மகன்
உதயநிதியை நாளைய முதல்வரே
என்று அழைக்கிறார்கள்.
------------------------------------------
'சமூக நீதி, சாதிய விடுதலை' என்று கூக்குரலிடும் பலர்,
பெரும் சாதிவெறியனாக உள்ளார்கள்.
------------------------------
இன்னும் பல பெரியார் பேத்திகள்
கள்ளக் காதலுக்கு பகிரங்க பிரச்சாரம் செய்கிறார்கள்.
கி.வீரமணி, சுப.வீ, ஆளூர் ஷா நவாஸ்... என இப்பட்டியலின் நீளம் இன்னும் பல மைல்களை தாண்டுகிறது.
உண்மையாக பெரியார் இருந்திருந்தால் "ஒரு வெங்காய வாழ்த்தும் வேண்டாம் மூடிட்டு இருங்கடா முட்டாக் கூ...முட்டைகளா" என்றுதான் கூறியிருப்பார்.
முடிட்டு இருங்கடா முட்டாக் கூ...முட்டைகளா
------------------------------------------------------------------
பெரியாருக்கு வாயில் புண் சுமார் ஒரு வார காலம் 'சாதாரன புண்தானே' என்று அலட்சியமாக அவர் தன் பிரச்சாரத்தை நிறுத்தவே இல்லை. அப்படியொரு தினம் வேலூரில் பொதுக் கூட்டத்தில் பேசச் சென்றார் பெரியார். வேதனை தாளாமல், வேறு வழியின்றி அங்கிருந்த ஒரு மருத்துவமனைக்கு சென்றார்.
சுமார் அரை மணி நேரம் வாயில் ஏற்பட்ட புண்ணை ஆராய்ந்த மருத்துவர், மிகவும் தயங்கித் தயங்கி பெரியாரிடம் கூறினார், "ஐயா உங்களுக்கு இது சாதாரண புண் மாதிரி தெரியல. இது வாய்ப்புற்று மாதிரி இருக்குதுங்க" என்றார்.
அந்த மருத்துவர் சொன்ன மாத்திரத்தில் பெரியார் ஒரு குழந்தையைப் போல குலுங்கி குலுங்கி அழுதார்.
"ஐயா வயசாயிருச்சுனா நோய் வர்றது சகஜம்தானே!" என சாந்தப்படுத்தினார் மருத்துவர்.
பெரியார் சொன்னார், "நான் அதுக்காக அழலேங்க. நான் கடவுள பற்றி திட்டும் போதெல்லாம், 'நீ வாயில புத்து வந்துதான்டா சாவ' என்று சாபமிட்டவர் ஏராளம் பேர். இப்ப இந்த உண்மை தெரிஞ்சுதுனா கடவுள்தான் கொன்னுட்டார்னு என் இத்தனையாண்டு உழைப்பும் ஒட்டுமொத்தமாக பறிபோயிடும்" என தேம்பி தேம்பி அழுதார்.
மருத்துவரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார், "டாக்டர் தயவுசெய்து இந்த விஷயத்தை மட்டும் யாரிடமும் சொல்லிடாதீங்க.
'என் இயக்கத்து கணக்கு வழக்குல கொஞ்சம் பிரச்சனை இருக்கு'னு எழுதி வச்சிட்டு நான் தற்கொலை பண்ணிடுறேன்" என மருத்துவரின் கைகளைப் பற்றிக்கொண்டு கேட்டுக்கொண்டார். மிகுந்த சோகமாக இருந்த பெரியாரை பார்த்து அவரின்
பிறகு தனக்கு மிக மிக நெருங்கிய நண்பர், வலுகட்டாயமாக கேட்க, அவரிடம் மட்டும் பெரியார் இதை தெரிவித்தார்.
அவர் சென்னைக்கு அழைத்துச் சென்று வேறொரு மருத்துவமனையில் பரிசோதித்த போது அது 'வாய்ப்புற்று அல்ல சாதாரன வாய்புண்தான்' என தெரிய வந்தது.
--------------------------------------------------
என்ன கூற விளைகிறேனெனில்,
தன் கொள்கையை நிலைநிறுத்த தன்னையே இழக்க தயங்காதவர் பெரியார். அவர் கொள்கையில் நமக்கு முரண் இருக்கும். ஆனால் அவரிடம் பயில வேண்டிய ஒன்று தான் 'சார்ந்த கொள்கைக்கா இறுதி வரை தீர்க்கமாய் இருப்பது'
பெரியார்SocialTwist Tell-a-Friend

No comments: