பாகுபலி மாதிரி படங்களையெல்லாம் பாத்தா பயமாதான் இருக்கு...
நம் முன்னோர்கள் இப்டிலாமா நம்ம மண்ணையும் பெண்ணையும் உசுர கொடுத்து காப்பாத்திருக்காங்னு..
எப்போ மன்னராட்சி முடிவிற்க்கு வந்ததோ
அப்போதே நம்ம கலாச்சாரம் வீரம் எல்லாமே போச்சுதான்..
இப்போதும் அதே பிரச்சனைதான்
நம்மண்ணுக்கும் கலாச்சாரத்திற்க்கும்.
ஆனா நம் முன்னோர்கள் மாதிரி சாகப்போறோம்னு நெஞ்ச நிமித்து நிற்க்க முடியிதா...
நிச்சயமா இல்லைனுதான் சொல்லுவேன்..
அன்று வெள்ளையனை எதிர்த்தோம் இன்று நம்ம ஆளுங்களையே(தமிழன்) எதிர்க்க வேண்டிய சூழல்.
சுட்டு கொல்வானுகனு தெரியாமதான் சாகுது தமிழினம்.
நிச்சயமா செத்ருவோம்னு தெரிஞ்சே பூலித்தேவன் படையில் மொத ஆளா நெஞ்சமட்டுமே சுவராக காட்டி துப்பாக்கி தோட்டாவை நெஞ்சில தாங்கி எம்புட்டு பேர்டா உசுர விட்டு இந்த மண்ண காப்பாத்திருப்பாங்க.
நம்மனால முடியிமா...
எவனாச்சும் சண்டைக்கு வந்தாதாகூட. வேணாம் குடும்பம் இருக்குனு ஒதுங்கி போக தமிழினம் பழகிடுச்சு.
அப்போ நம்ம நிலத்தை புடுங்கிதானே சாலை போடுவான்.
நிலம் போனா அதது அவனவன் பிரச்சனைனு போனிங்கனா
சாலை போட்டு வச்சிட்டு சோத்துக்கு அமெரிக்காவ கெஞ்சிட்டு இருப்பிங்களா..
ஏன்னா பழைய கஞ்சி விற்ப்பனைக்கே வந்திருச்சு.
போன தலைமுறைதான் என் அப்பா.
அவருக்கு உழவு தெரியும்.
அவரோட மகன் எனக்கு களையெடுக்க தெரியும்
ஆனா என்னோட மகனுக்குபடிக்க மட்டும்தான் தெரியும்
ஆனா விவசாயம் தெரியவே தெரியாது.
யார்தான்டா அரிசியை விளைவிப்பது...
இப்பவும் கிராமத்துல படிப்புனா விவசாயம்னு சொந்த ஊர்லயே வாழ்றவனும் படிச்சிட்டு விவசாயமே பன்ன முடியலையேனு தன்னோட நிலத்தில விவசாயம் பன்றதும் அதே தமிழன்தான்..
ஆதங்கம்.
எல்லாமே போச்சு.
நம்மனால விவசாமும் பன்ன முடியாது
எவனுக்கும் சோறும் போட முடிமாது.
முன்னாடிலாம் சோறு பழைய கஞ்சியாகும்.யாராச்சும் வந்திருவாகனு சேத்து சமைப்போம்.இப்போ மாவு வாங்கி மனசு நிறையிதோ இல்லையோ வயிறு நிறைஞ்சா போதும்னு வாழ பழகிட்டோம்.
சரிப்பா என் மகனும் உன் மகனும் சாப்ட்வேர் பொறியாளர் ஆகிடனும்னு நினைச்சிட்டா
எவன்டா அரிசியை உற்ப்பத்தி பன்றது..
விசயம் ஒன்னே ஒன்னுதான்
நம்மகிட்ட நம் முன்னோர்ளோட அந்த உழைப்பு இல்ல.
மண்மீதான பற்று இல்ல..
இல்லேனா நாமளே ஆக்ஸிஜனுக்கு கையேந்திட்டுதான் இருந்திருப்போம்.
ஆனா அடுத்த தலைமுறை நல்லா இருக்கனும்னா,
நம்ம கையில முன்னோர்கள் கொடுத்திட்டு போனதில பாதியாச்சும் காப்பாத்தனும்ல..
நாம தமிழன்னு சொல்லிட்டுசண்டைதான் போடுறோமே தவிற
வேற ஒன்னுமே செய்யலங்க.
நம்ம நாமே காரி துப்பி தொடைச்சிட்டு ஒன்னு சொல்லிக்கிறேன்..
நம்மமுப்பாட்டனோட மயிறுக்கு கூட
நாம வொர்த் இல்ல..
அந்தக்கால தமிழன் பூமத்திய ரேகையில் நேர்கோட்டில் கோவில் அமைத்தவன்.
நிழல் தரையில் விழாமல் கோவில் கட்டியலன்
ஆனா
இப்ப நாம
படிச்சதுனாலதான்டா முட்டாளா இருக்கோம்.
Ruban C
13 மணி நேரம் ·
SocialTwist Tell-a-Friend

No comments: