பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம்


***பாகம்-1***
கிபி1755மார்ச் மாதம் மணப்பறையில் உள்ள கள்ளர் படைப்பற்றை வென்று மதுரையில் உள்ள நாவாபின் மதுரை பிரதிநிதியான மியானாவை பிடிப்பதற்காக கர்னல் ஹெரானும்,கான் சாகிப் என்கிற மருத நாயகமும் மதுரைக்கு வருகிறார்கள்.
இவர்களுடைய வருகையையொட்டி மியான அங்கிருந்து தப்பி மதுரையில் இருந்து 8கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்குடி (திறம்பூர் என்பது அதனுடைய தொண்மையான் பெயர், மேலூருக்கும் மதுரைக்கும் நடுவில் ) என்கிற இடத்தில் ஒழிந்து கொள்கிறார்.



இதனால் கர்னல் ஹெரானும்,கான் சாகிப்பும் கோவில்குடியை நோக்கி செல்கிறார்கள். இதனை எதிர்பார்த்த மியானா மீண்டும் அங்கிருந்து தப்பி செல்கிறார்.
பின்பு மிகவும் தாமதமாக வந்த கர்னல் ஹெரான் கோவில்குடியில் உள்ள கள்ளர்கள் பூர்வீகமாக வணங்கக்கூடிய கோவிலை பார்த்து மியானாவை பிடிக்கும் சாக்கில் அந்த கோவிலை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார்.
கோவிலை சுற்றி காவலுக்கு இருந்த கள்ளர் பற்றுடன் சண்டையிட்டு அங்கிருந்த அனைத்து கள்ளர்களையும் கொன்றுவிட்டு பின்பு கொள்ளையடிக்க தயாராகிறார் கர்னல் ஹெரான்.
கான் சாகிப்புக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லாமல் கோவிலில் ஏறுவதற்கு ஏணி மற்றும் உபகரணங்கள் இல்லை என்றும் மேலும் மியானா இங்கிருந்து தப்பி சென்றுவிட்டார் எனவும் கூறுகிறார்.
ஆனால் இதனை ஏற்காத கர்னல் ஹெரான் அந்த கோவிலின் கோட்டை கதவை வைக்கோல் போரை வைத்து தீயிட்டு எரிக்க ஆணயிடுகிறார்.
இதனை ஏற்று கான்சாகிப்பும் படைவீரர்களும் தீயிட்டு கதவை தகர்த்து உள்ளே நுழைந்து இஷ்டம் போல் அனைத்தையும் சூரையாடி கோவிலை தரைமட்டமாக்குகிறார்கள்.
மேலும் கள்ளர்கள் காலங்காலமாக வழிபடும் அவர்களது சாமி சிலையை பேத்து எடுக்கிறார்கள்.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை பிரிட்டீஸ் ஆய்வாளர்கள் இராபர்ட் ஓர்ம்,எஸ்.சி ஹிலும்,பிரிட்டீஸ் கவுன்சிலும் கடும் கண்டனமும்,வருத்ததையும் தெரிவிக்கிறார்கள். மேலும் கர்னல் ஹெரான் ஒட்டுமொத்த மிலிட்டரி விதிமுறைகளை மீறிவிட்டார் எனவும் குறிக்கிறார்கள்.
கொள்ளையடித்த கள்ளர்களின் சாமி சிலையை ஒரு பிரமாணரிடம் 5000 ரூபாய்க்கு கர்னல் ஹெரான் விற்க முனைகிறார் ஆனால் இதனால் ஏற்படும் பின்விளைவு அறிந்த அந்த பிராமணர் ஏற்க மறுக்கிறார் இதனால் அந்த சாமி சிலையை கொள்ளையடித்த பொருட்களோடு சேர்த்து கட்டுகிறார்கள்.
பின்பு அங்கிருந்து மாமறவர் காத்தப்ப பூலித்தேவரிடம் சண்டையிட நெல்லையை நோக்கி செல்கிறார்கள்
இந்த சம்பவத்தால் மிகவும் உக்கிரம் அடைந்த கள்ளர் பழங்குடியினர் கர்னல் ஹெரானையும் அவனது படையினரையும்
எப்படி பழிதீர்த்தார்கள்....?
எப்படி தங்களுடைய சாமி சிலையை மீட்டார்கள்....?
என்பதை அடுத்த பாகத்தில் காண்போம்
நன்றி
War of coromandel
The rebel commandant by S.C Hill
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம்SocialTwist Tell-a-Friend

No comments: